World

மனைவியை எரித்து கொன்ற கணவன் தடயத்தை மறைக்க உதவிய கள்ளக் காதலி!

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை கொலை செய்து எரித்த கணவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மாவட்டம் விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்த‌ கட்டிட தொழிலாளி நாகமுத்து (33). இவரது மனைவி நிர்மலா (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி சேர்ந்து வாழலாம் என்று கூறி நாகமுத்து நிர்மலா தேவியையும் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் நிர்மலாவைக் காணவில்லை என்று அவரது சகோதரர் மூர்த்தி, நேற்று இரவு விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக நாகமுத்துவிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்து, வீட்டின் பின்புறம் உள்ள தகரசெட்டில் வைத்து எரித்து விட்டதாக நாகமுத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக குழந்தைகளை தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு இரவு வீட்டில் வைத்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், நாகமுத்துவுக்கு அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும், நிர்மலா இறந்த பிறகு அவரை எரிப்பதற்கு முனீஸ்வரி உதவியதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி. மனோகர் மற்றும் விருதுநகர் டி.எஸ்.பி.அருணாச்சலம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நாகமுத்து மற்றும் முனீஸ்வரியை கைது செய்த சூலக்கரை பொலிஸார், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading