World

சேவல் சண்டையால் 20 பேர் சுட்டுக் கொலை!

மெக்சிகோவில் சேவல் சண்டை விடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அதிகாரத்திற்காக போட்டியிடும் இரு போதைக் கும்பலிடையே இடம்பெற்ற இரகசிய சேவல் சண்டையிலேயே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading