World

பர்தா அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த உணவகத்திற்கு சீல்!

ஹ்ரைனில் உள்ள இந்திய உணவகமொன்றில் பர்தா அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹ்ரைனில் பர்தா அணிந்து வந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க ஹ்ரைனின் தலைநகரான மனாமாவில் இயங்கி வந்த ‘பஹ்ரைன் லாந்தர்ஸ்‘ என்ற இந்திய உணவகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குறித்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய உணவக நிர்வாகம், சம்பந்தப்பட்ட மேலாளரை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading