ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டு குறித்த சர்ச்சை!
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இன்று (08) காலை இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரம் வழங்கல், களஞ்சிய நிலையத்திற்கு புதிய மனிதவள கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் விசாரணைக்காகவே அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதேவேளை, அத தெரணவின் ‘பிக் ஃபோகஸ்’ நிகழ்ச்சியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
”வாக்குச் சீட்டு அச்சடிக்கும் இயந்திரங்களிலும் ஒரு அளவு உண்டு. நீளம் தொடர்பானது. குறித்த அளவை மீறினால், வாக்குச்சீட்டின் வடிவத்தை மாற்ற வேண்டும். வாக்குச் சீட்டை நீளமானால், பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். ஒரு வாக்காளர் அதிக நேரம் வாக்குச் சாவடியில் செலவிட நேரிடும்”.
