Sports

டென்னிஸ் பந்தை பயன்படுத்தி கோலியின் ஓவியத்தை வரைந்த ரசிகர்

டென்னிஸ் பந்தை பயன்படுத்தி விராட் கோலியின் ஓவியத்தை தீட்டியுள்ளார் ரசிகர் ஒருவர். அதை அழகாக அப்படியே வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 25,322 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 639 ரன்கள் குவித்துள்ளார். வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இந்நிலையில், கோலியின் முகத்தை தத்ரூபமாக டென்னிஸ் பந்தை பயன்படுத்தி கருநிற வண்ணம் கொண்டு வரைந்துள்ளார் ரசிகர் ஒருவர். வெள்ளை நிற சுவரில் டென்னிஸ் பந்தை எறிந்து இந்த ஓவியத்தை அந்த ரசிகர் வரைந்துள்ளார். வரைந்து முடிந்தவுடன் பந்தும், கையுமாக சிரித்த முகத்துடன் அவர் கடந்து செல்கிறார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading