Cinema

தொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு போகாததால் அழுத பிரபல நடிகை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்மாபெரும் நடிகர் பட்டாளங்களின் நடிப்பில் உருவான தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காதலியாக முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு மணிரத்தினம் அனுப்பவில்லை என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அழுதுள்ளார்.
அப்பொழுது ஷோபனாவுக்கு வெறும் 20 வயது மட்டுமே நிறைவடைந்த நிலையில் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என ஏக்கத்துடன் இருக்கும் ஷோபனாவிற்கு நடிகர் மம்முட்டி ஆதரவாகப் பேசி சமாதானப்படுத்தி உள்ளார்.
மேலும் பேசிய அவர், ரஜினியுடன் மீண்டும் இணைந்து “சிவா” படத்திலும் ஷோபனா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஷோபனாவை பார்க்க வீட்டின் மேற்கூரையை திறந்துகொண்டு உள்ளே படுத்திருக்கும் ஷோபனாவின் கால்களை பிடிப்பது உள்ளிட்ட காட்சி அமைக்கப்பட்டிருந்தாகவும், ஆனால் ரஜினிகாந்த் அந்த காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதால் அந்தக்காட்சியே வேண்டாம் என்று சொன்னார்.

மேலும் அவ்வாறு காலை பிடிக்கும் காட்சியில் நடித்தால் என்னுடைய ரசிகன்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிடிவாதமாக ரஜினிகாந்த் இருந்ததாகவும், பின்னர் ஒரு வழியாக ரஜினிகாந்தை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் கால்களை பிடிப்பது உள்ளிட்டு படமாக்கப்பட்டதாகவும் கூறினார்.
சிவா படம் வெளியான பின்பு ரஜினிகாந்த் சொன்னதைப் போலவே அவரது ரசிகன்கள் சோபனாவின் காலை பிடிக்கும் அந்த காட்சியை விரும்பாத ரசிகன்கள் ” தலைவா நீ போய் அவளோட கால பிடிக்கலாமா ” என தியேட்டரில் அந்த காட்சி வரும்போது பலரது எண்ண ஓட்டங்களை வெளிப்படையாக கூறினார்கள்
என்று இதுவரை யாரும் அறியாத பல சுவாரசியமான தகவல்களை ஷோபனா வெளிப்படுத்தி பழைய நினைவுகளை மீட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading