மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்
மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், பாராளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலை மின்சார திருத்த சட்டமூலம் பெற வேண்டுமென நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகள் திருத்தப்பட்டால் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு மீறல்கள் பொருந்தாது எனவும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

You must be logged in to post a comment.