முதல் தடவையாக கர்ப்பமாக இருக்கும் AI அமைச்சர்…!!!
அல்பேனியாவின் AI பெண் அமைச்சர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முதல் AI அமைச்சர்
அல்பேனிய ஏஐ அமைச்சரான Diella அவர்களுடைய பெயருக்கு பின்னால் மிகப் பெரிய காரணம் மறைந்திருக்கிறது.
அல்பேனிய மொழியில் ‘சூரியன்’ என்று அர்த்தமாகும். ஊழலற்ற, முழுமையான வெளிப்படத்தன்மையுடன் கூடிய கொள்முதல் துறையை எடுத்து நடத்துவதே இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் மறைமுக கருத்தாகும்.
இந்த ஏஐ அமைச்சர் பார்ப்பதற்கு அல்பேனிய பாரம்பரிய உடையணிந்து சாதாரண பெண் போன்று காட்சியளிப்பார். இதற்கு முன்னர் ஏஐ அமைச்சர், ஈ-அல்பேனியா தளத்தில் மெய்நிகர் உதவியாளராக அறிமுகப்பட்டு, அதன் பின்னர் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் அரசு ஆவணங்களை பெறுவதில் உதவி செய்தார்.
AI தொழில் நுட்பம்
AI தொழில் நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. ஏஐ கேர்ள் பிரண்ட், ஏஐ பாய் பிரண்ட் என AI தொழில்நுட்பத்தில் இல்லாத விடயங்களே இல்லை.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அல்பேனியா நாட்டில் முதல் AI அமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், கடந்த செப்டம்பர் மாதத்தில் AI அமைச்சர் நியமிக்கப்பட்டார்.
இந்த AI அமைச்சருக்கு‘டயல்லா’ என பெயர் வைக்கப்பட்டது. வழக்கம் போன்று இந்த அமைச்சர் பொது கொள்முதல் துறையில் நியமனம் கொடுக்கப்பட்டது.
முறைகேடு நடக்காமல் இருக்க வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் ஆகிய இரண்டு நோக்கங்களுக்காகவே இந்த AI அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
83 குழந்தைகளுக்கு தாயான டயல்லா
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அல்பேனிய பிரதமர் எடி ராமா ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். அதில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI அமைச்சர் தற்போது 83 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று AI உதவியாளர்கள், எம்.பிக்கள் அவையில் இல்லாத சந்தர்ப்பம் வந்தாலும், அவர் தவற விடும் விடயங்களை தெரிந்து கொண்டு, உரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவார்.

You must be logged in to post a comment.