ரணில் 13ம் திகதியின் பின்னர் பதவி விலகுவார் நாள் குறித்த பிரபல ஜோதிடர்!

எதிர்வரும் 13ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் கூறுகிறார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், திரு.கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறும் நாளை சரியாக கணித்த கணிப்பாளர் தாம் எனவும் கசரச்சந்திர மேலும் தெரிவிக்கின்றார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
