வட கொரியா அணு ஆயுத தயாரிப்பு மிகவும் பாரதூரமான வளர்ச்சி!!
வடகொரியாவின் யோங்பியோன் அணு உலையில் அணுசக்தி நடவடிக்கைகள் “வேகமாக அதிகரித்து” வருவதாக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் குரோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவின் இந்தத் திடீர் நடவடிக்கை, அந்நாட்டின் அணு ஆயுதத் தயாரிப்புத் திறனில் “மிகவும் பாரதூரமான உயர்வை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, வடகொரியா பல டஜன் அணுக்கரு தலைப்புகளைக் (Nuclear Warheads) கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியாங்யாங்கின் இந்த அணுசக்தி விரிவாக்கம் சர்வதேசப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஐநா சபை கவலை வெளியிட்டுள்ளது.

You must be logged in to post a comment.