Local

2ஆவது அலைமூலம் 27743 பேருக்கு கொரோனா 134 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 24 ஆயிரத்து 648பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 762 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22  ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று  ஒருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading