Sports

ஆசியக் கிண்ண ரி – 20 தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு!

ஆசியக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.

இந்தத் தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுப்புத் தெரிவித்ததால் மாற்றப்பட்டது.

தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்தத் தொடர் 2020இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ரி – 20 உலகக் கிண்ணத்திற்கு முன் நடைபெற இருக்கின்றது.

இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading