Lead NewsLocal

அனைத்துக்கட்சித் தலைவர்களை அவசரமாகச் சந்திக்கிறார் ரணில்!

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியமான சந்திப்புக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், முக்கியமான இதர விடயங்கள் தொடர்பிலும் இங்கு பிரதமர் பேசவுள்ளார்.

உடனடித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஆராய்ந்து வருகின்றது எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading