இஸ்ரேலுடனாண உடன்படிக்கையை ரத்து செய்தது இத்தாலி!!
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் இராணுவத் தளவாடப் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அனைத்தும் இதன் மூலம் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணையின் ஸ்திரமற்ற நிலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, ஒரு நிலையான போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில் இத்தாலி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

You must be logged in to post a comment.