முழுமையான ஏவுகணைகள் இன்னும் பயன்படுத்தவில்லை! ஈரான் அறிவிப்பு!!
ஈரான் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய போரின் போது ஈரானின் ஏவுகணை ஆற்றலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பெரும் பகுதி இன்னும் பயன்படுத்தப்படாமல் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.