இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் (AAT Sri Lanka) ஆனது, ‘தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் 2025-2030 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது 2026 ஜூலை பரீட்சை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், கல்விக்கான விசேடத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியன தொடர்பில் இந்நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. தற்போதுள்ள 2020-2025 பாடத்திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் இந்தப் புதிய கட்டமைப்பானது, தொழில்முறை கணக்கியல் கல்வியில் ஒரு மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நிலைபேறான தன்மை வெளிப்படுத்தல் தரநிலைகள் (Sustainability disclosure standards) மற்றும் உலகளாவிய ரீதியில் மாற்றமடைந்து வரும் கணக்கியல் கல்வித் தரங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பாடத்திட்ட மாற்றத்திற்கு அப்பால், டிஜிட்டல் மயமாக்கப்படும் உலகளாவிய பொருளாதாரத்தில் இடைநிலை கணக்கியல் நிபுணர்களின் பங்கை வலுப்படுத்துவதற்கும், கணக்கியல் துறை சார்ந்த வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் AAT ஸ்ரீ லங்கா நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் கூட்டாண்மை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (SME) வணிகத் துறைகளுக்கு அவசியமான திறமையான கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு AAT ஸ்ரீ லங்கா நிறுவப்பட்டது. அன்றிலிருந்து, இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கணக்கியல் மற்றும் வணிக நிபுணர்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி தொழில்முறை நிறுவகமாக வளர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), தன்னியக்க முறைமை (Automation), விநியோகச் சங்கிலி (Blockchain) தொழில்நுட்பம், நிறுவன வளத் திட்டமிடல் (ERP) தொகுதிகள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், வணிகப் பகுப்பாய்வு, டிஜிட்டல் அறிக்கையிடல் போன்றவை கணக்கியல் துறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை, 2025-2030 AAT பாடத்திட்டம் தெளிவாகக் கையாள்கிறது. டிஜிட்டல் அறிவு, நிலைபேறான கணக்கியல், நெறிமுறை ரீதியான தலைமைத்துவம் மற்றும் பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டமைப்பானது, தொழில்நுட்பம் சார்ந்த வணிகச் சூழலில் வெற்றிபெறத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது. புதிய 2025-2030 AAT பாடத் திட்டமானது தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் எனும் வலுவான வாக்குறுதியை வழங்குகிறது. இந்த பாடத்திட்டமானது நான்கு ஒருங்கிணைந்த தூண்களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணக்கியல் மற்றும் நிதி (Accounting and Finance), செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவம் (Performance Analysis and Management), சட்டம், வரிவிதிப்பு மற்றும் கணக்காய்வு (Legal, Taxation
Read More
You must be logged in to post a comment.